யாழில் 2,000 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/09/2018 (புதன்கிழமை)
யாழ் தீபக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி யாழ் தீபகத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக உத்தேச திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கைக்கு அமைவாக 2000 மில்லியன் ரூபா முதலீட்டுடன் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைசசர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர் வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை மேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.