1963ம் ஆண்டு வல்வை சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கட்டுரைப் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2019 (புதன்கிழமை)
பவளவிழாக் கொண்டாட்டம் 75வது ஆண்டு சிறப்பாக நடைபெற நிலையத்தின் தலைவர் கப்டன் .சி.சிவநேசன் அவர்கள் தலைமையில் 29, 30, 31 மார்ச் மூன்று தினங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வெளிநாட்டில் வாழும் வல்வையர்கள் அம்மன் திருவிழாவிற்கு வருகை தருபவர்களும் பார்ப்பதற்கு வசதியாக ஒரு கிழமை முன்பு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம், நாடகங்கள், கரப்பந்தாட்டம், வினோத உடைப்போட்டி, கடற்கரை கரப்பந் தாட்டம், போன்றவை வல்வையின் வெவ்வேறு மைதானங்களில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. பவளவிழா மலரும் வெளிவருவது சிறப்பானது. இந்நிகழ்வுகளில் வல்வை ஆவணக்காப்பகமும் கலந்துகொள்வதோடு விழா சிறப்புற நடைபெற எமது வாழ்த்துக்கள்.
நீங்காத நினைவுகளுடன்.........
1963ம் ஆண்டு எமது சனசமூக நிலையத்தினால் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. 18வயதுக்கு மேற்பட்டோருக்கான கட்டுரைப்போட்டியில் ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றார்.
18வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் நான் (நகுலசிகாமணி) அப்போது எனது வயது 15. மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டேன்.
வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் அப்போது இரவுப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந் தார். அவரிடம் 'தமிழ்" கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவுகளுடன் அவருடைய கட்டுரையை 'வெள்ளிவிழா மலரிலிருந்து" வல்வெட்டித்துறை RG வாசகர்களுக்கு அறியத்தருவதில் பெருமை அடைகிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: March 14, 2019 at 20:48
சிறப்பு
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.