பரீட்சை திணைக்களத்தின் பெறுபேறுகளை ஒன்லைன் மூலம் உறுதிசெய்யலாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2018 (புதன்கிழமை)
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பெறுபேறுகளை ஒன்லைன் முறையில் உறுதி செய்ய முடியும். இதன் முதற்கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.
பரீட்சை சான்றிதழை உறுதி செய்யும் நடவடிக்கையை பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ் கிளை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
உறுதி செய்வதற்கான கோரிக்கையை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் போது இடம் பெறும் முறைகேடுகள் கால தாமதம் ஆகியவற்றை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
இதற்காகவே இந்த ஒன்லைன் முறை கணனியுடன் நேரடி தொடர்பை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக வலய அலுவலகங்களுக்கு பெறுபேறுகளை உறுதி செய்யும் அதிகாரம் பரவலாக்கபபட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.