கணபதி பாலர் பாடசாலை ஆக்கத்திறன் கண்காட்சியும் "Smart Class Room" திறப்புவிழாவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2018 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும் "Smart Class Room" திறப்புவிழாவும் இன்று 21.11.2018 (புதன்கிழமை) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பருத்தித்துறைக் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி.சுரேஸ் சுதாஜினிதேவி அவர்களும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கெளரவ.M.K.சிவாஜிலிங்கம், வல்வை மகளீர் மகா வித்தியாலய அதிபர் செல்வி.இராட்சியலட்சுமி சுப்பிரமணியக்குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
பாலர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்கள் அவர்கள் பாலர்களுடன் இணைந்து கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கெளரவ.M. K.சிவாஜிலிங்கம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அன்பளிப்புச் செய்யப்பட்ட 'Smart Class Room' இற்கான 'Interactive White board ' பாலர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்ப்படது.
தொடர்ந்து கணபதி மஹால் மண்டபத்தில் விருந்தினர்களின் சிறப்புரைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அயற்பாடசாலை மாணவர்களும் , பொதுமக்களும் கண்காட்சியினை பார்வையிட்டு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.