‘களப்பலியில் முதற்புலி” - சத்தியநாதன் பற்றிய நூலை எழுதியவர் அதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2017 (வெள்ளிக்கிழமை)
நேற்று மரணமான வல்வையின் பிரபல எழுத்தாளர் திரு ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 50 வருடங்களில் எழுத்துலகில் தனக்கென ஒரு தடம் பதித்தவர் ஆவார். இந்த இணையதளத்தின் ஆஸ்தான எழுத்தாளராக இருந்து வந்தார்.
நொடிப் பொழுதில் கவிதை மற்றும் கட்டுரைகளை வரைவதில் புலமை பெற்ற இவரே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதாலாவது சாவைத் தேடிக் கொண்ட கம்பர்மலை வல்வெட்டிதுறையைச் சேர்ந்த சத்தியநாதன் (சங்கர்) பற்றிய “களப்பலியில் முதற்புலி” என்னும் நூலை வரைந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிர் நீத்த உறுப்பினருக்கு என விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது நூல் இது எனவும் கூறப்படுகின்றது.
இது தவிர இதர பல ஆக்கங்களையும் 80 – 90 காலப் பகுதியில், இவரின் மாணாக்கர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இவர் எழுதியுள்ளதாகக் கூறப் பட்ட போதும் இவற்றை உறுதிப்படுத்தமுடியவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.