1 ஆம் ஆண்டு நினைவஞ்சலியும் மதக் கிரியைகளும் - அமரர் வ.ஆ.ஆதிரூபசிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலியும் மதக் கிரியைகளும் - அமரர் வ.ஆ.ஆதிரூபசிங்கம்
(BA, இளைப்பாறிய பிரதி மேலதிக அதிகாரி, பருத்தித்துறை போக்குவரத்துச் சபை)
மலர்வு – 24.08.1938 உதிர்வு - 06.07.2017
திதி - 25.06.2018
பன்னிரண்டு திங்கள் மறைந்தோடியது
பாசமிகு எங்கள் தந்தையின் மறைவு
அறிவுரைகள் பல கூறும் உங்கள்
திருமுகம் காணாது துடிக்கின்றோம்
சந்நிதி முருகன் திருப்பணி செய்தீர்கள்
சாந்தியுடன் மரணத்தை வரவழைத்தீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த அமரர் வ.ஆ.ஆதிரூபசிங்கம் (BA, இளைப்பாறிய பிரதி மேலதிக அதிகாரி, பருத்தித்துறை போக்குவரத்துச் சபை) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும், ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து மதிய போசனமும் அன்னாரது இல்லத்தில் நாளை மறுதினம் 25.06.2018 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் உற்றார், உறவினர் மற்றம் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.