கடந்த 21 ஆம் திகதி கொண்டாடப்பட்ட உலக மீன்பிடித்துறை நாளை (World Fisheries Day) முன்னிட்டு, இலங்கை மீன்பிடிக் கூட்டுத் தாபனம் (Ceylon Fishery Harbor Corporation - CFHC), இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் உதவியுடன், மீனவர்களுக்கான எப் எம் வானொலி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
‘திவர குவான் விதுல் சீவாய’ (Fisheries Radio Service, மீன்பிடி வானொலி சேவை) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையானது, முதற்கட்டமாக 20 மீன்பிடி துறைமுகங்களில் ஒன்லைன் வானொலி சேவையாக (Online radio service) ஒலிபரப்பப்படவுள்ளது.
இதன் இரண்டாவது கட்டமாக, இந்த சேவை இலங்கை முழுவதும் நேரலை வானொலி சேவையாக (FM radio service)
விஸ்தரிக்கப்படவுள்ளதுடன், இந்த சேவையில் வானிலை காலநிலை தொடர்பான தகவல்கள், மீன்பிடி தொடர்பான தகவல்கள் மற்றும் விதிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை ஒலிபரப்படவுள்ளன என நியூஸ்.எல்கே செய்தி வெளியிட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.