பெண்களுக்கும் உதைபந்து - உடுப்பிட்டி மகளிரில் ஆரம்பித்து வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/09/2018 (வெள்ளிக்கிழமை)
Football for women’s எனும் தொனிப்பொருளோடு வடமராட்சி லீக் மற்றும் அரியாலை பயிற்சி நிலையத்தின் இணைந்த வேலைத்திட்டம் நேற்றைய தினம் உடுப்பிட்டி மகளீர் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன புட்சால், பீச் சொக்கர் உபதலைவரும் வடமராட்சி லீக்கின் தலைவருமான தா.மு.வேதாபரணம் ,அரியாலை பயிற்சி நிலைய இயக்குனர் கிளிபேர்ட் அன்ரனிப்பிள்ளை மற்றும் தலமை பயிற்றுனர் டெனிஸ்ரன் விஜயகுமார், வடமராட்சி லீக்கின் செயலாளர் தி.வரதராசன் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள மற்றும் மாணவிகள் கலந்து கொண்டதுடன், வாரத்தின் மூன்றுநாட்கள் பயிற்சிகள் கிரமமாக நடைபெற வடமராட்சி லீக்கால் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.