வல்வையின் 2 பாரிய வேலைத்திட்டம் தொடர்பான கூட்டம் இன்று யாழில் மங்கள தலமையில் இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2016 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள தேசிய தரத்திலான நீச்சல் தடாக வளாகம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் இன்று (12) நண்பகல் யாழ் அரச அதிபர் பணிமனையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலமையில் இடம்பெற்றுள்ளது.
மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படவுள்ள சுமார் 20 கோடி ரூபா நிதியினைப் பயன்படுத்தி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் சர்வதேச தரத்திலான ஒரு நீச்சல் தடாகம் அமைப்பது தொடர்பாகவும், மற்றும் வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள சுங்க இலாகாவிற்குச் சொந்தமான காணியை சுவீகரித்து, அந்தப் பகுதியிலும் ஒரு சிறிய நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டாரங்கு என்பவை அமைப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
குறித்த இந்தக் கூட்டத்தில் யாழ் அரச அதிபர் திரு.வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம், பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் திரு.ஜெயசீலன், வல்வை நகரசபை செயலாளர் திரு.பிரசாத், மத்திய விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வசந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விஜிதரன், முன்னாள் வல்வை நகரசபை உபதலைவர் திரு.சதீஷ், முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினர் மயூரன், ஓய்வுநிலை பேராசிரியர் திரு.இராஜேந்திரன், ஆழிக்குமரன் ஆனந்தனின் உறவினர் திரு.செந்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.