நெல்லியடியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/10/2014 (திங்கட்கிழமை)
வடமராட்சியின் நெல்லியடியில் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் புதிய பஸ் நிலையம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நண்பகல் இடம்பெற்றது. வடமாகாண சபையின் 38 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்தக் கட்டடத்துக்கான அடிக்கல்லை வடக்குமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் நாட்டியிருந்தார்.
கரவெட்டிப் பிரதேச சபைத் தலைவர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கே.பரஞ்சோதி, வே.சிவயோகன், பா.கஜதீபன், ச.சுகிர்தன் ஆகியோரும் பருத்தித்துறை நகர சபைத் தலைவர் சபா.ரவீந்திரன், வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் க.சதீஸ், பருத்தித்துறை இ.போ.ச. முகாமையாளர் க.கந்தசாமி, வடமராட்சி சிற்றூர்திச் சேவைச் சங்க தலைவர் அ.அன்ரன், முச்சக்கர வண்டித் சங்கத் தலைவர் மற்றும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினா்களும். பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த புதிய பஸ் நிலையம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 திகதிக்குள் பூர்த்தியாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.