Thuraya வகை செய்மதித் தொலைபேசி வைத்திருந்த கப்பலின் 4 மாலுமிகள் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/06/2016 (திங்கட்கிழமை)
மும்பையில் 26/11 இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செய்மதி தொலைபேசிகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் பனாமாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றின் மாலுமிகள் நால்வர் ஓடிஸா (Odisha) கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி, Thuraya வகை செய்மதி தொலைபேசியில் இருந்து வெளிப்பட்ட சமிக்ஞையைத் தொடர்ந்து, கொல்கத்தா (Kolkata) கடலோர காவற்படையினர், Dhamra துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த Frontier Triumph கப்பலை அவதானிக்கத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து விசாரணைகளிற்காக கடந்த 16 ஆம் திகதி குறித்த கப்பலுக்கு சென்ற அதிகாரிகளிடம் கப்பல் கப்டன், கப்பலில் குறித்த செய்மதித் தொலைபேசி எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். ஆனாலும் தீவிர சோதனைகளை மேற்கொண்ட அதிகாரிகள், கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த Thuraya வகை செய்மதி தொலைபேசியைக் கைப்பற்றியுள்ளனர்.
Thuraya வகை செய்மதி தொலைபேசிகள் பற்றிய விபரங்களை இந்திய கடற்பரப்பிற்குள் வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய முறையில் அறிவிக்கப்படவேண்டும் என்பது கட்டாயமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர் எனவும் ஒருவர் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவரும் ஆவார்.
மேற்கண்ட செய்தி செய்த கடல் சார் ஊடகங்களில் NDTV யை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.