யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி விஜயகுமரகுரு அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான Dr. செல்வச்சந்திரன் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சீனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமரகுரு அவர்களின் அருமை மனைவியும்,
சரவணபவ, மாதுமை, நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மச்சந்திரன், அருள்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஜோசுவா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆர்த்தர் ராசா அவர்களின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பரமகுரு, Dr. பத்மலோஜினி, தேவரஞ்சிதலோஜினி, தயானந்தகுரு, கமலாதேவி, காலஞ்சென்ற சித்திரவேலாயுதகுரு, இந்திராதேவி, சதானந்தகுரு, உமாபதிசிவம், விமலேந்திரகுமார், மேகலலோஜினி, குணவதி, சாந்தி, ராதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
Tuesday, 05 Nov 2019 12:30 PM - 1:30 PM
Croydon Cemetery, Mitcham Road, London CR9 3AT, UK
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.