கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2015 (வியாழக்கிழமை)
வல்வை கணபதி பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.
கணபதி பாலர் பாடசாலை தலைவர் திரு.பூ.அகமணிதேவர் (J.P) அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.தி.கருணைநாதன் (ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி, விவசாயத் திணைக்களம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு அனைவரையும் வருகை தருமாறு அழைகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பிரதீபன் (canada)
Posted Date: June 02, 2015 at 17:10
வாழ்த்துக்கள் கணபதி பாலர் பாடசாலைக்கு !
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.