கணபதி மஹால் - வல்வையின் இரண்டாவது மண்டபம், அசைவமும் பரிமாறலாம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரண்டாவது மண்டபம் தற்பொழுது இயங்கி வருகின்றது. கடந்த 31.01.2018 அன்று திறந்துவைக்கப்பட்ட கணபதி பாலர் பாடசாலையும் அதனுடன்கூடிய கலாச்சார மண்டபத்தினையும் உள்ளடக்கிய கட்டடத்தொகுதியிலேயே முதலாம் மற்றும் இரண்டாம் மாடிகளில் 'கணபதி மஹால்' என்னும் பெயரில் மண்டபம் தற்பொழுது சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
குறித்த மண்டபத்தில் கடந்த மே 19 ஆம் திகதி முதலாவது நிகழ்வாக பிறந்ததினக் கொண்டாட்டம் ஒன்றும், ஜூலை 11 ஆம் திகதி கல்யாண நிகழ்வு ஒன்றும் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து பலவேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
தலைநகரில் அமையப்பெற்றுள்ள மண்டபங்களை ஒத்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, குளிர் சாதன வசதிகளுடன் வல்வையில் அமையப்பெற்ற முதலாவது மண்டபம் இதுவாகும். மேலும் அதிகளவான வாகனங்களை நிறுத்தக் கூடிய வசதிகளும் இயல்பாகவே அமையப்பெற்றுள்ளது.
அத்துடன் இங்கு உணவு வகைகளை வெளியில் இருந்து கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. விசேடமாக இங்கு அசைவ உணவு வகைகளும் அனுமதிக்கப்படுவதால் மண்டபம் குறிப்பிடக் கூடிய வரவேற்பை பெறும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Kunes (Jaffna)
Posted Date: August 19, 2018 at 08:06
மண்டபத்தில் மிஞ்சும் பிளாஸ்ரிக்கழிவுகளயும் உணவு மீதிகளையும் உரிய முறையில் அகற்ற வேண்டும் என்ற தகவலையும் சேர்த்து எழுதுங்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.