தொ.வீ.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்ற உயர்தர மாணவர் ஒன்றுகூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/08/2019 (வியாழக்கிழமை)
யா/தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 13 ஆம் திகதி உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் க. யதுசன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு வித்தியாலய பழைய மாணவனும் தொண்டைமானாறு கல்வி மேம்பாட்டுக் குழுவின் செயற்பாட்டாளரும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய திரு அருந்தவராசா கிருபாகரன் (B.Sc) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அதிபரின் வாழ்த்துரை பொறுப்பாசிரியர் உரை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.