வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ஒரு இலட்சம் ரூபா வரையில் கடனைப் பெற்று திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் கடன் மற்றும் வட்டியை அரசாங்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் போது தற்போது கடனை வழங்கும் நுண் நிதி நிறுவனத்திற்கு புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.