புலமை பரீசில் பரீட்சை - தமிழ் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் 2 ஆம், 3ஆம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/10/2018 (வெள்ளிக்கிழமை)
2018ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அகில இலங்கை ரீதியாக 199 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை பிலியந்தல -சோமவீர சந்ரசிறி வித்தியாலயத்தைச் சேர்ந்த புமித் மெத்துனுல் வித்தானகேவும், வெயங்கொட – சென்.மேரிஸ் கல்லூரியின் குருகுலசூரிய சனுபா திமத் பெரேராவும் பெற்றுள்ளனர்.
மூன்றாம் இடத்தில் ரெஜி ரணத்துங்க ஆரம்ப வித்தியாலயம் – மினுவங்கொடயைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி செனுஜி அக்கித்ம ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார்.
அதேநேரம், தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் மகேந்திரன் திகழொளிபவனும், சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதியும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.
தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலையை சேர்ந்த பாலக்குமார் ஹரித்திக்ஹனுசுஜா 197 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் அவர் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.