நடைபெற்றுவரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் அழித்தல் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 8 மணியளவில் தேர்களின் வீதி உலா சுமார் 9 மணியளவில் ஆரம்பித்து, சுமார் 1230 மணியளவில் அம்பாளின் தேர் தரிப்பிடத்தை வந்தடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது அர்ச்சனைகள், மற்றும் பச்சை சாத்தும் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
இன்றைய தேர்த் திருவிழாவில் ஆலயத்தின் வீதிகள் முழுதும் பக்தர்களால் நிரம்பியிருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணை மற்றும் அடி அழித்தல் போன்ற நேர்த்திகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.