இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள கிராமியப் பஞ்சாயத்து ஒன்று பொது இடங்களில் முத்தம் கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது. சில தம்பதியினராலும், கோவாவிற்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளாலும் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது உள்ளூர்வாசிகளுக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்துவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவின் தலைநகர் பனாஜி (Panaji) ற்கு அருகில் அமைந்துள்ள Salvador do Mundo என்னும் கிராமியப் பஞ்சாயத்தே (Village panchayat) பொது இடங்களில் முத்தம் கொடுப்பது, மது அருந்துவது மற்றும் அதிக சத்ததில் பாடல்களை ஒலிக்க விடுவதை தடை செய்து ஏகமனதாக சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே கோவாவின் மாநில Directorate of Art and Culture ஜீன்ஸ், Sleeveless top மற்றும் அலுவலகங்களுக்கு தகுதியற்ற ஆடைகளை அலுவலகங்களில் அணியைத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.