வடமராட்சி வடக்கில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வல்வெட்டித்துறை ரேவடி பூங்கா சில இனந்தெரியாத விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் வல்வை நகரசபையால் அமைக்கப்பட்டிருந்த 5 பயணிகள் இருக்கைகள் மற்றும் ரேவடி கழகத்தினரால் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் திட்டமிட்ட வகையில் உடைத்து எறியப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக ரேவடிக் கழகத்தினால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் வல்வை பகுதியில் இடம்பெற்ற இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: May 26, 2018 at 20:53
கடுமையாக கண்டிக்கபடவேண்டியது .இதுபோன்ற குழப்பவேலைகள் மறுபடியும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.