ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளையொட்டி (ஓகஸ்ற் 30) இலங்கைத் தீவில் காணாமல் போன தமிழ் உறவுகளுக்கான நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் லண்டனிலும் சென்னையிலும் இடம்பெற்றுள்ளன.
லண்டனில் பிரித்தானியப் பிரதமர் வாயிலுக்கு முன்னராக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தில் சென்னையில் உள்ள ஐ.நா கட்டமைப்பான யுனிசெப் முன் தமிழக வாழ்வுரிமைக்கட்சி ஒருங்கிணைத்திருந்தது.
லண்டனில் நேற்று முன்தினம் ஓகஸ்ற் 30 ஆம் நாள் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வானது மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இடம்பெற்றிருந்ததோடு, கோரிக்கை மனுவொன்றும் பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, சென்னையில் நேற்று ஓகஸ்ற் 31 நாள் இடமபெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பெருந்திரளான உணர்வாளர்கள் பங்கெடுத்திருந்ததோடு, கோரிக்கை மனுவொன்றும் ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கப்பட்டடுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.