வளர்ந்து வரும் நாடுகளில் இணையதள வசதிகள் குறைவாகவேயுள்ளன – Facebook report
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2015 (வெள்ளிக்கிழமை)
அதிகமான வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இணையதளங்களை பார்வையிடுவதற்கான வசதிகள் குறைவாகவே உள்ளதாக Facebook வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அதிகமான கட்டணம் மற்றும் தேவையானளவு கிடைக்காத தன்மையே காரணம் என கட்ந்த செவ்வாய் கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook உலகம் முழுதும் இணையதள இணைப்பை விரிவாக்கும் நோக்குடன், தனது Internet.ORG மூலமாக நாடத்தியிருந்த ஒரு ஆய்வின் படி ‘’வளர்ச்சி வீதம்” குறைவாகவே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் அதனது ஆய்வின் படி 2015 ஆம் ஆண்டு முற்பகுதியில் 3 பில்லியன் மக்கள் “Online” இருக்கவுள்ளார்கள். ஆனாலும் இது மொத்த உலக மக்கள் தொகையில் 40% மாத்திரமே ஆகும். ஆனாலும் இதில், வளர்ச்சியடைந்த நாடுகளில் 76% மக்களும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் வெறும் 29.8% மக்களுமே அடங்கவுள்ளனர்.
இந்த வளர்ச்சி இப்படியே போனால் 2019 ஆம் ஆண்டில் 4 பில்லியன் மக்களை இணையதளம் சென்றடையாது என கவலையை வேறு வெளியிட்டுள்ளது பேஸ்புக்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.