இந்திரவிழா நாளை மறுதினம் வல்வையில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/04/2018 (வெள்ளிக்கிழமை)
நடைபெற்று வரும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வானதும் யாழில் வருடந்தோறும் இடம்பெறும் பிரத்தியேக நிகழ்வுகளில் ஒன்றானதுமான 'வல்வை இந்திரவிழா' நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இந்திரவிழா ஏற்பாடுகள் தற்பொழுது மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. ஊரணி குடியேற்றத்திட்டம் தொடக்கம் ஊரிக்காடு பழைய சோடாக்கடை வரையான பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியின் சுமார் 2 கிலோமீட்டர்கள் நீளமான பகுதியில் விழா இடம்பெறவுள்ளது.
இதனையொட்டி ஊரணி குடியேற்றத்திட்டம் தொடக்கம் ஊரிக்காடு வரையான பகுதிகள் அலங்கரிக்கப்பட்டுவருகின்றது. சுமார் பத்து வரையான மேடைகள் அமைக்கப்பட்டு இசைநிகழ்ச்சிகள், பல்வேறு சமய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
கீழே படங்களில் கடந்த வருடம் இந்திரவிழாவின் போது நெடியக்காட்டில் வானில் ஏவப்பட்ட 60 அடி இராட்சதபுகைக் குண்டு ஒன்றையும், வல்வை அம்மன் கோயில் மேற்கு வீதியில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர அனுமான் மின் அலங்காரம் ஒன்றின் காட்சியையும் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.