நீரிழிவை கட்டுப்படுத்தகூடிய புதிய நெல்லினம் அறிமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/07/2018 (திங்கட்கிழமை)
இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்தும் புதிய நெல்லினம் ஒன்றை அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நெல் இனத்தில் குறைந்த அளவு புரதம் காணப்படுவதனால், இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்த முடியும். இது தற்போது பரீட்சார்த்த மட்டத்திலுள்ள உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் புரதச் சத்து கூடுதலான உணவை உட்கொள்வதால் சீனியின் அளவு அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தீர்வாக புதிய நெல்லினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு உகந்த பல பயிர் இனங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.