நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை, இலண்டன் பல்கலைக்கழகம் (SOAS) தனது பாட மொழியாக அமைத்து, தமிழில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை உலகமே உற்றுநோக்கும் இலண்டன் மாநகரில் செய்ய விரும்புகிறது என்பது எத்துணை நற்செய்தி!
இதனால், தமிழர் பண்பாடு, வரலாறு, மருத்துவம், அறிவியல், மெய்யியல், கட்டடக்கலை, நாகரீகம் என அனைத்தையும் உலக அரங்கில் பேசுபொருளாக மாறும் காலம் நம் கண்முன்னே உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது தானே உண்மை.
இந்த இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை பற்றிய தகவல்களைப் பெற, வரும் ஆடி 18 அன்று (Sunday, 02 August 2020) இலண்டன் நேரம் 2PM-4PM [2pm(London), 6:30pm(Chennai/Jaffna), 6am (NY), 6am (LA), 9pm(Kuala Lumpur/Singapore), 10pm (Tokyo), 11pm (Sydney)], அன்று நடைபெறும் பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கத்தில் கலந்துகொள்ளுங்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.