The International Maritime Transport Workers’ Federation (ITF) வர்த்தகக் கப்பல்களில் ஒப்பந்தம் முடிந்த பின்னரும் தொழில் புரிந்துவரும் மாலுமிகளை தமது அதிகாரத்துக்கு அமைய கப்பல்களில் தொடந்து பணி புரிவதை நிறுத்தும் படி அறிவித்துள்ளது.
COVID-19 காரணமாக உலக நாடுகள் ஏற்படுத்தியுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகக் கப்பல்களில் இருந்து மாலுமிகள் இறங்க முடியாமல் தவித்து வருவதைக் கருத்திற் கொண்டே இந்த அறிக்கை விடப்பட்டுள்ளது.
உலகில் இதுவரை வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறாத ஒரே ஒரு துறை வர்த்தகக் கப்பல் துறையே ஆகும்.
ITF இன் வேண்டுகோளையேற்று மாலுமிகள் பணி நிறுத்தம் செய்வார்களேயானால் சர்வதேச ரீதியில் பண்டமாற்றில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படும் என சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.