William F Tapking புலமைப் பரிசிலைப் பெறும் முதலாவது மாணவி
பிரசுரிக்கபட்ட திகதி: 22/06/2016 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி சரண்யா மதிவண்ணன் தனது உயர்தர கல்வியின் (12th grade) முடிவில் மேரிலாந்தின் போல்ற்றிமோர் William F. Tapking என்னும் ஜூனியர் புலமைப் பரிசிலை கடந்த 5 ஆம் திகதி பெற்றுள்ளார்.
மேற்குறித்த புலமைப் பரிசிலானாது ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்படுவது என்பதுடன் இதுவரை ஆண் மாணாக்கர்களே இதனைப் பெற்றுவந்துள்ள நிலையில், இந்த புலமைப் பரிசிலைப் பெறும் முதலாவது மாணவியாக செல்வி சரண்யா விளங்குகின்றார்.
Maryland Baltimore County பலகலைக் கழகத்தில் UMBC கற்கை நெறி மேற்கொள்ளவுள்ள சரண்யா, எதிர்காலத்தில் ஒரு நரம்பியல் நிபுணராக வர எண்ணியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.