யாழ்ப்பாணம் சென்னை விமான சேவை 10 ஆம் திகதி ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2019 (வெள்ளிக்கிழமை)
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கிடையிலான வர்த்தக விமானங்கள் நவம்பர் 10 ஆம் திகதியிலிருந்து தொடங்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நவம்பர் 1ஆம் திகதியிலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான போக்குவரத்துக்கள் ஆரம்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சிவில் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் எச்.எம்.எம். சி. நிமல்சிறி கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் 10ஆம் திகதியிலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கான வர்த்தக விமானங்களின் சேவை ஆரம்பிக்கப்படும்
வர்த்தக விமானங்களை இந்திய விமான நிறுவனம் ஒன்று இயக்குகிறது. ஏர் இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ்-ஏர், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏழு விமானங்களை இயக்க விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, மேலதிகமாக, உள்நாட்டு விமான நிறுவனம் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையங்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படட பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டு, முதலாம் கட்ட பணிகள் பூர்த்தியான நிலையில் கடந்த 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.