பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த விமான நிலையத்தில் இருந்து பிராந்திய மற்றும் சர்வதேச விமான பயணங்களை முன்னெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஒத்துழைப்பு தெரிவித்து இந்திய அரசாங்கத்தினால் இலங்கை நாணயத்தில் 300 மில்லியின் ரூபாவை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முனை( டேர்மினல்) மாற்றுதல், மின்சக்தி விநியோகம் பயன்பாட்டு சேவை மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதியினைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக - இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு சமர்ப்பித்த உடன்பாட்டு ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.