யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2019 (வியாழக்கிழமை)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகவும் நூலக நிறுவனத்தின் (Noolaham Foundation) ஒரு தன்னார்வப் பணிப்பாளராகவும் பங்காற்றிய சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் 25 மார்கழி 2019 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
ஈழத்து நூலகவியல் துறையில் நிகரற்ற ஆளுமையையும் பங்களிப்பையும் திருமதி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்கள் வழங்கி வந்திருந்தார்.
யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர், நாட்டுப்பற்றாளர் சிறீகாந்தலட்சுமி அவர்கள் காலமானார்.
அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலி.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பிரதம நூலகர் (chief Librarian), இலங்கை நூலகசங்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழ்தலைவர் (SLLA-Srilanka Library Association) திருமதி சிறிகாந்தலட்சுமி அருளானந்தம் தனது 59அவது வயதில் இன்று (25.12.19) மாரடைப்பு ( Heart Attack) காரணமாக காலமானார்.
இணுவிலில் பிறந்த சிறீகாந்தலட்சுமி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பெங்களுரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்ட பின்படிப்பினை மேற்கொண்டுள்ளார்.
பத்தி எழுத்தாளர், கவிஞர், நூல் விமர்சகர், என பலதுறைகளில் சிறந்து விளங்கிய அவர் பெண்ணியல் சிந்தனையாளராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்கியிருந்தார்.
நூலகத்துறைசார்ந்து
தகவல் வளங்களும் சேவைகளும் (குமரன் புத்தக நிலையம்)
தகவல்வள முகாமைத்துவம் (குமரன் புத்தக நிலையம்)
நூலக அபிவிருத்தி : ஒரு பயில்நோக்கு (சேமமடு)
அகரவரிசை-பகுப்பாக்கக் கலைச்சொற்தொகுதி (குமரன் புத்தக நிலையம்)
சொற்கருவூலம்: உருவாக்கம் பராமரிப்பு பயன்பாடு (நூலக விழிப்புணர்வு நிறுவகம்)
நூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்
நூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை
உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
அத்துடன் தமிழர் பாரம்பரிய பாவனைப்பொருட்களை சேமித்து தன்னுடைய வீட்டில் சிறிய அளவிலான ஆவணக் காப்பகத்தையும் பேணிவந்ததாககவும், பாரம்பரிய ஆவணங்களை சிறார்களுக்கு கண்காட்சிகள் ஊடாக காட்சிப்படுத்துவதிலும் அக்கறை காட்டி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் போராட்டத்தில் பெண்போராளிகளின் கல்விசார் நடவடிக்கைகளிலும், அவர்களின் படைப்பியல் சார் துறை வளர்ச்சியிலும் பங்காற்றியவர்களில் ஒருவராகவும் விளங்கிய சிறீகாந்தலட்சுமி வானதி பதிப்பகத்தின் ஊடாக பல நூல்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (கரவையூரான்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.