யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக யாழ் புகைப்படப்பிடிப்பாளர் சமூகத்தின் ( Jaffna Photography Society ) முதலாவது கண்காட்சி யாழ் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா கலையரங்கத்தில் 22ம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி 25 ம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது.
இக் கண்காட்சியில் 50 ற்கு மேற்பட்ட கலைஞர்களினால் பல்வேறு வகையிலான 200 ற்கும் அதிகமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எமது சமூகத்தின், எமது மக்களின் வாழ்வியல், கலை, கலாச்சாரம் மற்றும் விலங்குகள், பறவைகள் எம் மக்களின் ஏக்கம், தவிப்பு, இன்ப துன்பங்கள், தொழில் முறைகள், சடங்குகள், விழாக்கள் என பல்வேறு வகையான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
புகைப்படங்கள் வெறும் காட்சிப்பொருளல்ல. எம் மறக்க முடியாத நினைவுகள், பொக்கிஷங்கள் மற்றும் கடந்த கால வரலாறுகள் என பலவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாகும்.
இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களின் முழுமையான பதிவுகள் இக் காணொளியில். கண்காட்சியை தவற விட்டவர்கள் இக் காணொளியில் கண்டுகொள்ளலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.