யாழ் பல்கலை மாணவனின் கொரொனாவிற்கு எதிரான கண்டுபிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/10/2020 (புதன்கிழமை)
யாழ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடத்தில் Electro Engineering Technology படிக்கும் இரண்டாம் வருட மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களினால் கொரோனா வைரலிருந்து பாதுகாப்பதற்கான மூன்று புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளிடமிருந்து வெளியில் வைரஸ் பரவாமல் இருப்பதற்குரிய Emergency Safety Box for Corona virus எனும் கண்டுபிடிப்பும், கொரோனா வைரஸிக்கள் 80 நனோமீற்றர் தொடக்கம் 120 நனோமீற்றர் விட்டத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதே விட்ட அளவுகளிலான கதிர்வீச்சினால் அழிக்கக்கூடிய கருவியான Radiation Range Killer for Corona virus எனும் கண்டுபிடிப்பும். இது மற்றைய UV கதிர்வீச்சுக்கள் அல்லாமல் விசேடமாக வைரஸின் விட்டத்துக்காக தயாரிக்கப்பட்டதாகும். இதன் மூலம் மனித உடல்கள் அல்லத பிற பொருட்களை இக் கருவியின் மூலம் சுத்தம் செய்ய முடியும். இதில் கதிர்வீச்சினால் மனித உடலுக்குச் செல்லாமல் தடுப்பதற்குரிய விசேட Sensors இருப்பது விசேட அம்சமாகும்.
மூன்றாவது கண்டுபிடிப்பாக, பொதுவாக கொரோனா வைரஸிக்கள் சுவாசம் மூலமும் கைகளின் தொடுகை மூலமாகவும் பரவுகிறது. சுவாசம் மூலமாக பரவுவதைத் தடுப்பதற்கு முகக்கவசங்களை அணிகின்றோம். கைகளினால் பரவுவதைத் தடுப்பதற்கு இலகுவாக எல்லாராலும் பயன்படுத்தக்கூடிய Safety Hand Gloves for Corona virus எனும் கையுறைகளையும் உருவாக்கியுள்ளார். இந்த கையுறைகள் இரு பக்கங்களும் திறந்தவெளியைக் கொண்டுள்ளதாக இருப்பதாலும் தேவைக்கேற்ப வடிவங்களை மாற்றிக்கொள்ள முடிந்தாலும் எந்த நேரத்திலும் பயன்படுத்த முடியும்.
இம் மூன்று கண்டுபிடிப்புக்களுடன் மொத்தமாக இதுவரை 102 கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார். இதுவரை 43 தேசிய விருதுகளையும் ஐந்து நாடுகளுடைய சிறப்பு விருதுகளையும் ஆறு சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.