ஜிந்துப்பிட்டி கொவிட்19 தொற்றுநோயாளர் தொற்றுநோயாளி அல்ல
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2020 (திங்கட்கிழமை)
கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொவிட் 19 தொற்று நோயாளர் என அடையாளங் காணப்பட்ட நபர் 19 தொற்று நோயாளி அல்ல என்பது 5 PCR பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொழும்பு ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொவிட் 19 நோயாளர் தொடர்பாக தெளிவுபடுத்தல்
கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் பதிவான கொவிட் 19 தொற்று நோயாளர் என அடையாளங் காணப்பட்ட நபர் கரையோர பாதுகாப்பு வீரர் என்பதினாலும், வெளி நாட்டிலிருந்து வந்ததன் காரணமாகவும் கொவிட் 19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ள ஒரு நபராக அடையாளம் காணப்பதில் சுகாதார பிரிவு தொடர்ந்து கவனம் செலுத்தியது.
இதற்கமைவாக வீட்டு தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனையின் பெறுபேற்றின் அடிப்படையில் இவர் கொவிட் 19 தொற்று நோயாளராக அடையாளங் காணப்பட்ட உடன் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவுகளினால்; மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைவாக Pஊசு பரிசோதனையின் பெறுபேறாக உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் கொவிட் 19 நோயாளராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதே போன்று அவருடன் தொடர்புபட்டதாக கருதப்பட்ட சுமார் 154 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இருப்பினும் தொற்று நோயாளராக கருதப்பட்ட நபர் தொடர்பில் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 5 Pஊசு பரிசோதனைகளின் பெறுபேற்றின் அடிப்படையில் தொடர்ச்சியாக இந்த நபர் கொவிட் 19 நோயாளர் அல்ல என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மிகவும் பாதுகாப்பான நடவடிக்கையாக கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 154 பேரும் Pஊசு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் மத்தியில் எந்தவொரு கொவிட் 19 நோயாளரும் அடையாளங் காணப்படவில்லை.
இதன் காரணமாக கொவிட் 19 நோயாளர் என்று முதலில் அடையாளங் காணப்பட்ட நபர் வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதுடன் கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 154 பேரையும் மீண்டும் தமது வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.