வல்வையின் சமூக சேவையாளரும் சமதான நீதவானுமாகிய திரு பூபாலகிருஷ்ணசாமி அகமணிதேவர் இன்று காலமானார். இவருக்கு வயது 72. கடந்த சில மாதங்களாக நரம்பியல் சம்பந்தமான நோயினால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஓய்வு பெற்ற தபால் அதிபரான அகமணிதேவர் அவர்கள் வல்வையின் சிறந்த சமூக சேவையாளர் ஆவார். நெடியகாடு கணபதி படிப்பகம் தலைவர், செயலாளர் மற்றும் காப்பாளர், சிதம்பர கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர், நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் பரிபாலன சபை செயலாளர், வல்வை மாலுமிகள் சங்கம் போசகர், வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் கணக்காய்வாளர், 90 களின் நடுப்பகுதி அமைந்திருந்த வல்வை நகரசபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தின் தலைவர் என பல சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்தார்.
திரு.அகமணிதேவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உண்டு.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.