சமாதான நீதாவானும் நில அளவையாலருமான திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் இன்று அதிகாலை காலமானார். இன்று அதிகாலை 0130 மணியளவில் நேர்த்திக்கடனை முன்னிட்டு கரகம் எடுப்பதற்காக செடிலைத் தாங்கிய வண்ணம் வல்வெட்டித்துறை பருத்தித்துறை பிரதான வீதி வழியே சென்று கொண்டிருந்த வேளை மதவடிப் பகுதியில் திடீர் என ஏற்பட்ட சுகவீனம் ஏற்பட்டதாகவும், உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அங்கு ஏற்கனவே இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையத்தின் முன்னாள் செயலாளராகவும், வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தர்மகர்த்தசபையின் முன்னாள் செயலாளராகவும் விளங்கியிருந்தார். அத்துடன் கடந்த நகராட்சி மன்றத் தேர்தலில் மயிலியதனை வட்டாரத்தில் விகிதாசாரத்தில் போட்டியிட்டிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.