Nippon Kensen Kai Karate Do Association இன் கராத்தே சுற்றுப் போட்டி நேற்றைய தினம் வவுனியா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் 11 வயது ஆண்களுக்கான பிரிவில் வல்வையைச் சேர்ந்த முரளி பரிதியன் காட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் 10 வயதுப் பிரிவில் வல்வையைச் சேர்ந்த செல்வன் சந்தோஷ் முதலாம் இடத்தையும் 8 வயதுப் பிரிவில் செல்வன் தர்ஷன் காட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.
பருத்தித்துறை தற்காப்பு கலையகத்தின் சார்பில் போட்டியில் பங்கு கொண்ட எண்மர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் பிரபல தற்காப்புப் கலை வல்லுனர் திரு.சோதிசிவம் அவர்களின் மாணாக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.