கெருடாவில் ஞான வைரவர் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி நாளை நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/05/2015 (புதன்கிழமை)
கெருடாவில் ஞான வைரவர் முன்பள்ளி விளையாட்டுப் போட்டி நாளை வியாழக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கெருடாவில் ஞான வைரவர் முன்பள்ளி தலைவர் திரு.க.சதீஸ் தலைமையில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.தில்லைநாதன் (வடமராட்சி முன்பள்ளிப் பணிப்பாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்) அவர்களும், திரு.க.ஸ்ரீசந்திரா (ஞானாசாரியார் பாடசாலை அதிபர்) அவர்களும், திரு.க.உதயரூபன் (கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபர்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு அனைவரையும் வருகை தருமாறு அழைகின்றார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.