கெருடாவில் மாயவர் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/09/2018 (வியாழக்கிழமை)
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 23.09.2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றும், சமுத்திரத் தீர்த்தம் 24.09.2018 ஆம் திகதி திங்கட்கிழமை அன்றும், நன்னீர் தீர்த்தம் 25.09.2018 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இடம்பெறவுள்ளது.
தொண்டைமனாறு கெருடாவில் தெற்கில் அமைந்துள்ள ஸ்ரீ கெருடயம்பதி மாயவர் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்றத் திருவிழாவின் சில காட்சிகளைக் கீழே காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.