சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய உத்தரவு, உலக வன ஜீவராசிகள் நிதியத்துக்கும் மனு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
கிளிநொச்சி – அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தை ஒன்றை அடித்துக்கொன்றவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சீ.சூரியபண்டார தெரிவித்தார்.
சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வௌியாகியுள்ள காணொளிகள், நிழற்படங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு சிறுத்தையை பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை தென்னிலங்கையைச் சேர்ந்த வன விலங்கு ஆர்வலர்களால் சிறுத்தையை அடித்துக் கொன்றவர்களை கைது செய்யக் கோரி உலக வன ஜீவராசிகள் நிதியத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.