கடந்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமான வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வான குளிர்த்தித் திருவிழா (கற்பூரச்சட்டித் திருவிழா) நேற்று இரவு நிறைவுபெற்றுள்ளது.
நேற்று இரவு 0730 மணியளவில் ஆரம்பித்திருந்த பூஜையின் பின்னர், அம்பாள் வீதி உலா சுமார் 0930 மணியாளவில் ஆரம்பித்து உற்சவம் சுமார் 1030 மணியளவில் நிறைவடைந்தது.
குளிர்த்தித் திருவிழாவை முன்னிட்டு பல அடியார்கள் கரகம், பாற்செம்பு, பழனிக் கரகம் மற்றும் கற்பூரச் சட்டி ஆகிய நேர்த்திக் கடன்களில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.