ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம்- சமயக்கிரியைகள் இன்று இடம்பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2019 (வியாழக்கிழமை)
ஆழிக்குமரன் ஆனந்தன் தடாகம் அடுத்த மாதமளவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை சமயக் கிரியைகள் இடம்பெற்றது.
ஆடி மாதத்தில் பொதுவாக இது போன்ற சமயம் சார்ந்த வைபவங்கள் இடம்பெறுவது இல்லை ஆதலால் இன்று சமயக் கிரியைகள் இடம்பெற்றது.
இந்துக் கிரியைகளை வல்வை முத்துமாரியம்மன் குருக்கள் சிவஸ்ரீ தண்டபாணிக தேசிகர் அவர்களும், கிறிஸ்தவ கிரியைகளை வல்வை சென் செபாஸ்டியன் தேவாலய பாதிரியார் வணபிதா ம.கான்ஸ் போர்வேர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பாக நடாத்தினார்கள்.
நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை தலைவர் கோ.கருணானந்தராசா மற்றும் வல்வை நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.