உலகத் தமிழர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் விதமாக, இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை உருவாக்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் வைப்புநிதி தேவைப்படுகிறது (100 கோடி இந்திய பணம்). இந்த வைப்பு நிதியை திரட்டிவிட்டால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழை இலண்டனில் படிப்பிக்க இந்த நிதி போதுமானது. இந்த மகிழ்ச்சியான செய்தியை நாம் கொண்டாடுவோம்.
இதற்குத் தேவையான நிதியை சிறு துளி பெரு வெள்ளமாய் திரட்ட, திருக்குறள் சவால் என்ற இந்தத் திட்டத்தின் மூலம் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நீங்கள் செய்யவேண்டியது:
உங்களுக்குப் பிடித்த திருக்குறளை, தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் உங்கள் கைபேசியில் பதித்து, காணொளியாகப் சமூக வலைத்தளங்களில் (WhatsApp, FaceBook, Twitter,
Instagram) பதிவேற்றுங்கள்
குறைந்தது மூன்று நண்பர்களையாவது இந்த திருக்குறள் சவாலை ஏற்று செய்யும்படி காணொளியில் கோரிக்கை வையுங்கள்.
திருக்குறள் சவாலை ஏற்ற நண்பர்கள், ஒரு வாரத்திற்குள் தங்களுக்குப் பிடித்த திருக்குறளை விளக்கத்துடன் சொல்லி, தாங்கள் நண்பர்களையும் சவாலுக்கு அழைக்க வேண்டும்.
இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு நிதி அளிக்க விரும்பினால், கீழ்க்கண்ட இலண்டன் பல்கலைக்கழக இணைப்பிற்கு செல்லுங்கள். நீங்கள் செலுத்தும் பணம், பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக செல்கிறது.
https://soas.hubbub.net/p/TamilStudies/
அன்புடன்
இலண்டன் தமிழ்த்துறை ஒருங்கிணைப்புக் குழு (tamilchairuk@gmail.com)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.