வட வங்காள விரிகுடாவில் மேலும் புதியதொரு குறைந்த தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/08/2018 (சனிக்கிழமை)
வடக்கு வங்காள விரிகுடாவில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் இந்திய வானிலை ஆய்வு நிலையம் (India meteorological department) தெரிவித்துள்ளது. இன்று காலை 0830 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை 19 ஆம் திகதி அனேகமாக வலுப்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் நகர்வை பொறுத்து பருவமழை மீண்டும் இந்தியாவில் மிக தீவிரமடையும் சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி வீசும் பருவக்காற்று, வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி வேகமாக இழுக்கப்படுகிறது. இந்த காற்றின் இழுப்பு காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுவருகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.