இந்த நிலை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பெரும்பாலும் சூறாவளியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.