இன்றைய பூங்காவன நாதஸ்வரச் கச்சேரியில் விடுதலைப் புலிகள் எழுச்சிக் கானங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2018 (புதன்கிழமை)
தற்பொழுது நடைபெற்றுவரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான உற்சவகங்களில் ஒன்றான பூங்காவனம் உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. பூங்காவன உற்சவத்தில் விசேட தவில் நாதஸ்வரக் கச்சேரியும் இடம்பெற்றது.
தவில் நாதஸ்வரக் கச்சேரியின் இறுதியில் 'பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே' உட்பட்ட சில விடுதலைப் புலிகள் எழுச்சிக் கானங்கள் இசைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இசைக் கச்சேரியில் பெண் நாதஸ்வரக் கலைஞர் ஒருவரும் பங்கேற்றிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.