சென்னையிலிருந்து ஐரோப்பாவிற்கு நேரடி கப்பல் போக்குவரத்தை தொடங்கியது Maersk
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2015 (புதன்கிழமை)
தமிழகத்தின் சென்னையிலிருந்து வளைகுடா ஊடாக , ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடி கப்பல் போக்குவரத்தை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் கிழக்கு நுழைவாயிலாகக் கருதப்படும் சென்னை துறைமுகத்திலிருந்து முன்னர் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகள் சிறிய மற்றும் நடுத்தர கொள்கலன் கப்பல்களில் (Container ships) சிங்கப்பூர், மலேசியாவின் Port Klang மற்றும் கொழும்பு உள்ளிட்ட துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலம் சென்றடைய வேண்டிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழமையாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சென்னையிலிருந்து நேரடி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இதுவரை 11 கடல் வழித்தடங்களில் நேரடி கப்பல் போக்குவரத்து சென்னையிலிருந்து தொடங்கி இயக்கப்பட்டுவருகிறது.
இந்த வகையில் தற்போது சென்னையிலிருந்து கொழும்பு வழியாக வளைகுடா, ஐரோப்பாவிற்கான நேரடியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி கப்பல் நிறுவனமாகக் கருதப்படும் Maersk Shipping Line என்ற கப்பல் நிறுவனமே 'எம்.வி. மார்ஸ்க் இடாகோ' என்ற கப்பல் வழியாக இந்த முதல் பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.
சென்னைத் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நேரடி கப்பல் போக்குவரத்து தொடக்க விழா நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார், சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரும்பாலான தூர இடங்களுக்கான கொள்கல ஏற்றுமதி இறக்குமதி இலங்கையின் கொழும்பு துறைமுகம் ஊடாகவே இன்றுவரை இடம்பெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.