144 வருடங்களின் பின் இன்று இடம்பெற்ற மஹோதய புண்ணியகால தீர்த்தம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/02/2016 (திங்கட்கிழமை)
144 வருடங்களிற்கு ஒரு முறை மட்டும் நிகழும் மிகவும் அரிய மஹோதய புண்ணிய கால சமுத்திர தீர்த்தம், இன்று 8 ஆம் திகதி காலை வல்வெட்டிதுறையிலும் இடம்பெற்றது.
வழமைக்கு மாறாக சூரிய உதயத்திற்கு முன்னர் இந்த தீர்த்த உற்சவம், வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றது.
இந்த தீர்த்த உற்சவத்தையொட்டி வல்வெட்டித்துறை மற்றும் வல்வையைச் சூழவுள்ள 10 கோயில்களின் சுவாமிகள் தீர்த்த உற்சவத்திற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரணி தீர்த்தக் கடற்கரைக்கு நோக்கி எழுந்தருளியிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.