கிஞ்சித் நியூன மஹோதய புண்ணியகால சமுத்திரதீர்த்தம் இன்று காலை வல்வெட்டித்துறை ஊரணித் தீர்த்தக் கடற்கரியிலும் இடம்பெற்றது. அமாவாசை - திங்கட்கிழமை - திருவோண நட்சத்திரம் ஆகியவற்றுடன் "வியாதீபாத யோகமும் இணைந்து வரும் நன்னாளே "மகோதய புண்ணிய திருநாளாகும்.
வழமைக்கு மாறாக சூரிய உதயத்திற்கு முன்னர் இந்த தீர்த்த உற்சவம், வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றது.
இந்த தீர்த்த உற்சவத்தையொட்டி வல்வெட்டித்துறை மற்றும் வல்வையைச் சூழவுள்ள 10 கோயில்களின் சுவாமிகள் தீர்த்த வல்வையும் அதன் சூழ உள்ள நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார், வல்வை வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர், கப்பலுடையவர், புட்கரணிப் பிள்ளையார், ஆதிவைரவர், மாடந்தைப் பிள்ளையார், வயலூர் முருகன், வன்னிச்சி அம்மன், மானாங்கானை பராசக்தி அம்மன், வல்வெட்டி சித்திவிநாயகர் நாராயணசுவாமி ஆகிய 10 உற்சவ மூர்த்திகளின் தீர்த்த உற்சவம் நிறைவு பெற்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.