இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இராணுவத்தளபதி லெப்றினற் ஜெனரல் தயா ரத்நாயக்கே இன்று தனது பதவியிலிருந்து வெளியேறுகின்றார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பதவியிலிருந்து வந்தார்.
மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், இலங்கையின் 21 ஆவது இராணுவத் தளபதியாக பதவியேற்கும் இராணுவத் தளபதி ஆவார்.
மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, இலங்கை இராணுவத்தில் Cadet Officer ஆக 1980 ஆம் ஆண்டு சேர்ந்திருந்தார் (PTI)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.