யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் ‘’ மரம்’’ எனும் நாடக ஆற்றுகை நிகழ்த்தப்பட்டது. இன்நிகழ்வில் நடிகர்களாக ம.சுலக்ஷன், இ.மகிந்தன், இ.விநோதன். த. கில்மன், ஆ.சிறிகாந்த். போன்றோர் தமது அணுபவம் வய்ந்த நடிப்பினை வெளிப்படுத்தினர்.
இன் நாடகத்திற்கான ஒப்பனை அலங்கார வடிவமைப்பினை ம. சுலக்ஷன் மேற்கொண்டிருந்தார். இன்நாடகத்தின் ஒளி விதானிப்பு மற்றும் நெறியாள்கையினை தி தர்மலிங்கம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராத விதமாக ஆற்றுகையினைப் பார்ப்பதற்கு பல்கலைக்கழக அரங்கியல் மற்றும் ஏனைய துறைசார் மாணவர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், நாடக ஆர்வலர்கள், மற்றும் பொது பார்வயாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
இவ் ஆற்றுகை நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது. கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கலைஞர்களுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு சமகால அரங்கப் போக்குகள் தொடர்பான விசனங்களையும் தெரிவித்தனர்.
தற்கால அரங்க தயாரிப்புக்கள் மிகவும் அரிதாக காணப்படுவதாகவும், தயாரிக்கப்படும் ஒருசில ஆற்றுகைகளும் மிகவும் நலினமான நிலையில் உள்ளதாகவும், அரங்கு மிகவும் அழிந்துபோகும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளாதாகவும் ஆதங்கப்பட்டுக்கொண்டனர்.
அதே நேரம் யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் ஆற்றுகைகள் மிகவும் காத்திரமான படைப்பாகவும், அரங்க நுட்பங்கள் பலவற்றினையும் ஒன்றினைந்த அழகியல் வெளிப்பாடாக அமைந்ததாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு இத்தகைய ஆற்றுகைகள் பல பார்ப்போரையும் சென்றடைய வேண்டும் என்றும், இவ்வாறான ஆற்றுகைகள் தம் வாழ்நாளில் புதிதாக பார்ப்பதாகவும், பலரும் பல கருத்துக்களைக் கூறி அவர்களது அரங்கு சார்ந்த ஆர்வத்தையும் அதுசார் வளர்ச்சிக்காக முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் இத்தகைய நாடக செயற்பாடுகள் தொடந்தும் அரங்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமன்றி புதிய அரங்க பாரம்பரியத்தினை உருவாக்க வழிகோலும் என்பதில் ஐயமில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.